Saturday, August 29, 2009
பண்ணை உபகரணங்கள் - 6 (டிராபிக்கல்டர்)
டிராப்பிக்ல்டர் கருவியின் அங்கங்கள்:
1. விதைப்பான்
2. உரமிடும் கருவி
3. பார் கலப்பை
4. பரம்பு பலகை
5. மண் அணைக்கும் கருவி
6. களை எடுக்கும்; கருவி
டிராப்பிகல்டர் மூலம் எவ்வகை பயிர்களை பயிரிடலாம்?
டீராப்பிகல்டர் மூலம் வேர்கடலை, மக்காச்சோளம், சோளம், பயறு வகைகள், கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற பயிர்களைப் பயிரிட இயலும்.
டிராப்பிகல்டரின் சிறப்பு அம்சங்கள் என்ன?
1. ஒரே சமயத்தில் பார் மற்றும் சால்களை அமைத்து, அடியுரம்; இட்டு, விதைவிதைத்து விதையை மூட இயலும்.
2. மேலும் பயிர் வளர்ந்த பின்னர் களை எடுத்தல் மற்றும் மண் அணைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள இயலும்.
3. மண்ணின் ஈரம் இருக்கும் போதே விவசாயப்பணிகளை விரைவாக மேற்கொள்ள இயலும்.
4. சீரான இடைவெளியில் (பயிர் வரிசைகள் மற்றும் ஒரே வரிசையில் உள்ள பயிருக்கு இடையில்) விதைக்க இயலும். எனவே பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
5. அடியுரத்தை சரியான மற்றும் சீரான ஆழத்தில் இடுவதால் பயிர் எளிதாக வளர்ச்சியடைய ஏதுவாக இருக்கும்.
6. அகன்ற பார் சால்களை உருவாக்குவதால் மானாவாரிப் பயிரில் மழை நீரை அறுவடை செய்ய இயலும்.
7. டிராப்பிக்கல்டரை உழவுமாடுகள் மற்றும் டிராக்டர் இரண்டையும் கொண்டு இயக்க இயலும் என்பதால் சிறு, குறு, மத்திய மற்றும் பெரிய விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்த இயலும்.
--
பண்ணை உபகரணங்கள் - 5 (பார் கலப்பை)
பார் மற்றும் சால் அமைக்க பார்கலப்பை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சரியான அளவுகளில் சீரான உயரம் மற்றும் ஆழங்களில் பார் மற்றும் சால்கள் அமைக்கப்படுகின்றன.
பார் கலப்பை மூலம் மேட்டுப்பாத்திகளும் அகன்ற பார் சால்களும் அமைக்க இயலும்.
பண்ணை உபகரணங்கள் - 1 (உளி கலப்பை)
பண்ணை உபகரணங்கள் - 2 (இயந்திரக் களை எடுப்பான்)
பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்)
பண்ணை உபகரணங்கள் - 4 (சுழற் கலப்பை - ரோட்டோவேட்டர் அல்லது ரோட்டரி டில்லர்)
--
Wednesday, August 26, 2009
பண்ணை உபகரணங்கள் - 4 (சுழற் கலப்பை - ரோட்டோவேட்டர் அல்லது ரோட்டரி டில்லர்)
நில நிர்வாகத்தில் அடுத்த முக்கியமான பண்ணைக்கருவி சுழற்கலப்பை ஆகும். நன்கு பொடிக்கப்பட்ட விளை நிலமானது பயிற்களுக்குத் தோதான படுக்கையாகிறது .இவ்வாறான விளை நிலம் நீர் மற்றும் காற்று இவற்றை சமமான அளவில் கொள்வதால் பயிறுக்குத் தேவையான அளவில் பருக நீரும், சுவாசிக்கக் காற்றும் கிடைக்கிறது இவ்வாறு பயிருக்குத் தேவையான விளைமண்ணை உருவாக்குவதில் சுழற் கலப்பை பெரும் பங்கு வகிக்கிறது.
சுழற்கலப்பையின் வேலைகள் என்ன?
சுழற்கலப்பை உழப்படாத விளை மண்ணை வெட்டுகிறது(Cutting). அவ்வாறு வெட்டப்பட்ட விளைமண் பொடிக்கப்படுகிறது(Pulverizing) .பொடிக்கப்பட்ட விளைமண் சமப்படுத்தப் படுகிறது(Leveling). சுழற் கலப்பையின் கொழுக்கள் எதிர் எதிர் திசையில் இருப்பதாலும் அதன் சுழற்சி இயக்கத்தாலும் மண் வெட்டப்பட்டு பொடிக்கப்படுகிறது. இதன் பின்புறத்தில் ஓர் பரம்புப் பலகை இருப்பதால் பொடிக்கப்பட்ட மண் சமப் படுத்தப்படுகிறது. இதன் மூலம் சீரான(Free flowing) மேல்தட்டு விளைமண் கிடைக்கப் பெறுகிறது.
பயன்கள்:
• விளைமண் எத்தனை கடினமாக இருப்பினும் துகளாக்கப்படுகிறது.
• விளைநிலம் சமப்படுத்தப்படுவதால் நீர் நிர்வாகம் செம்மை பெறுகிறது.
• இதனால் களை நிர்வாகமும் எளிதாகிறது.
சுழற் கலப்பை 36 மற்றும் 42 கொழுக்களைக் கொண்ட இரண்டு வடிவங்களில் பெரும்பாலான விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது.
பண்ணை உபகரணங்கள் - 1 (உளி கலப்பை)
பண்ணை உபகரணங்கள் - 2 (இயந்திரக் களை எடுப்பான்)
பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்)
--
Sunday, August 16, 2009
விதைப்புடன் உரமிடும் கொருகலப்பை
சோமு: வணக்கம் விடிஞ்சும் விடியமா இருக்கிற இந்த நேரத்துல வந்து நிக்கிற என்ன விசயமப்பா
ராமு: கொருக்கலப்பைய வச்சு விதைக்கிறத பத்தி சொன்ன நீங்க அதோட உரத்தையும் சேர்த்து போட்ற கலப்பை இருக்கிறதா சொன்னிங்க அத பத்தி தெரிஞ்சுட்டு போலாமேன்னுதன் இவ்வளவு சீக்கிரமா வந்தேன்
சோமு: அதுவாப்பா குறைஞ்ச விலைல கிடைக்கிற இந்த கொருக்கலப்பை மூலம் நாம் விதைக்கிறதோட அடியுரத்தையும் சேர்த்து இடுவதுதான் இதனோட சிறப்பே!
ராமு : இந்த கலப்பை எப்படி இருக்கும்னு சொல்லுங்கண்ணே
சோமு: சொல்றேன் விதைப்பு மட்டுமே செய்ற கொருக்கலப்பை மாதரியே இதுலேயும் படுக்கை வச சட்டத்துல உள்ள தண்டுகளை மாத்தி அமைச்சு சாலோட இடைவெளியை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம் இதோட இரண்டு புனல்கள், புனல்களையும் கொழு முனைகளையும் இணைக்க குழாய்கள் இருக்கு இந்த புனல்கள் வழியே விதைகளையும் அடியுரத்தையும் போடும் போது ஒரு புனல் வழியே அடியுரம் விதைக்கு சற்று தள்ளி விழற மாதரி செஞ்சுருக்காங்க இதன் மூலம் விதைக்கிறதும் அடியுரம் போடுவதும் ஒரே நேரத்துல செஞ்சு முடிக்கமுடியுது
ராமு: ஆமாண்ணே வயல் வேலைக்கு ஆள் கிடைக்கிறது சிரமமா இருக்கிற இந்த நேரத்துல விதைப்புடன் உரமிடும் கொருக்கலப்பையை வச்சு விதைக்கும் போது விதையும் உரமும் வெவ்வேறு அழத்துல விழுது.அதோட விதைகள் வரிசைக்கு வரிசை சீரான இடைவெளில விதைக்கப்படுவதால கலைகளையும் மிகச்சொலபமா எடுத்துடலாம். இதனால கலைகளுக்கும் பயிருக்கும் பயிர்களுக்குள் ஏற்படுற போட்டி தவிர்க்கப்பட்டு பயிர் மட்டும் மிக அதிக அளவுல உரச் சத்தை எடுத்துக்கிட்டு வளர முடியும். என்ன நான் சொல்றது?
சோமு: ரொம்ப சரியா சொன்னப்பா நீ
ராமு: இந்த கலப்பைய பத்தி வேற எதாவது விவரம் இருக்கான்னே?
சோமு: இந்த கலப்பைல விதைகளையும் உரத்தையும் போட்டு வைக்கிற பகுதி இல்லாததால நம்ம மடியிலேயோ இல்லைன்னா முதுகிலேயோ கட்டி எடுத்துகிட்டு விதைக்கும் போது விதைக்க முடியும் ஒரு கொழு முனையோட உள்ள கலப்பைய வச்சு 0.25-0.30 ஹெக்டேர் நிலத்தையும் இரண்டு கொழு முனைய கொண்ட கலப்பைய வச்சு 0.6-0.8 ஹெக்டேர் நிலத்தையும் மூன்று கொழு முனைய கொண்ட கலப்பைய வச்சு 0.8-10 ஹெக்டேர் வரைலயும் ஒரே நாளில் விதைச்சு உரமிட்டு முடிச்சுடலாம்
ராமு: ரொம்ப சந்தோசம்னே இந்த முறை வேதைப்புடன் உரமிடும் இந்த கொருகலப்பைய வச்சு என்னோட பங்காளியை விட நான் நல்ல மகசூல் எடுப்பன்னேன்.
சோமு: நிச்சயம் எடுக்கலாம்ப்பா! அரோக்கியமான உங்க போட்டியில கண்டிப்பா ஜெயிக்க போவது நம்ம நாட்டோட விவசாயம்தாம்ப்பா!
--