பசுமை புரட்சி தொடங்க பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பசுமை புரட்சியினால் ஏற்பட்ட பின்விளைவுகளாலும், விவசாயிகளின் இன்றைய நிலை மோசமாக இருப்பதாலும், உணவு பொருளின் தேவை அதிகமாக இருப்பதாலும், விளை நிலங்களின் அளவு குறைவதலும் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவ்சாய உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன் ஒட்டு மொத்த கிராம புற மக்களின் வாழ்க்கை திறனை அதிகரிக்க இரண்டாம் பசுமை புரட்சியினை ஆரம்பிக்க தேவை இருப்பதை அறிந்து தன்னுடைய 90 ஆவது வயதில் தேசிய வேளாண் நிறுவனம் என்னும் அரசு சாரா நிறுவனத்தை தொடங்கினார். அந்நிறுவனம் விவசாய உற்பத்தி திறன் பெருக்கத்துக்காகவும், கிராம மக்கள் முன்னேற்றத்துக்காகவும் ஆற்றும் பணிகள் அளவிட முடியாது. அதன் பணிகளும் அதனால் மக்கள் அடையும் பயன்களை பற்றியும் பார்ப்போம்
நவீன மண் பரிசோதனை கூடம்

பயிரின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சளுக்கும் அடிப்படை தேவை மண்ணின் சத்துக்கள். இந்திய விவசாயிகள் தங்களுடைய மண்ணில் உள்ள சத்துக்கள் பற்றி அறிந்து கொள்ளாமல் தேவையான் உரங்களை தேவையான அளவு இடாமல் அதிகமான உரங்களை தேவையற்று இடுகின்றனர். மேலும் உரம் இடும் போது தழை சத்து, மணி சத்து மற்றும் சாம்பல் சத்து பற்றி மட்டும் கவலை கொண்டு பிற சத்துக்களை பற்றி கவலை படுவதில்லை.அரசு மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை செய்தாலும் அது அந்த அளவு தரமானதாக இல்லை.
இந்த பிரச்ச்னையை போக்க தேசிய வேளாண் நிறுவனம் உலக தரம் வாய்ந்த மண் பரிசோதனை கூடத்தை தொடங்கி உள்ளது. பயிரை விதைக்கும் முன் மண்ணை இப்பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் சத்துக்கள் சரியாக அளவிடபட்டு தேவையான் பயிருக்கு தேவையான உர பரிந்துரைகளை விவசாயிகளுக்கு தருகின்றனர். அது மட்டுமன்றி அந்த மண்ணின் தரத்தை உயர்த்த செய்ய வேண்டிய வழிமுறைகளையும் கூறுகின்றனர். இதன் மூலம் பயிருக்கு தேவையான உரத்தின் அளவு சரியாக நிர்ணயிக்க பட்டு, தேவையான உரங்களை சரியான காலத்தில், தகுந்த முறைபடி பயிருக்கு இடும் முறை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதனால் பயிரின் உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கிறது.
இதை படிக்கும் விவசாயிகளும் தங்கள் மண்ணை நவீன முறையில் பரிசோதனை செய்ய தேசிய வேளாண் நிறுவனத்தை தொடர்பு கொள்ள்ளாம்.
தொலை பேசி: 22542598/22542803
மின்னஞ்சல்: nationalagro@gmail.com
இந்நிறுவனத்தின் மற்ற பணிகளை பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம்
--