வயலில் தேவையான பயிரின் எண்ணிக்கையை பெருவதற்கு விதையின் முளைப்பு திறனை அறிவது மிகவும் அவசியம். பொதுவாக விவசாயிகள் தங்கள் விதையை பிறரிடமிருந்து வாங்குவதால் அதன் முளைப்பு திறன் குறித்து அறிந்திருப்பது கடினம். தங்களிடம் உள்ள விதைகளில் நன்கு முளைப்பு திறன் மட்டும் உள்ள விதையை பிரித்து எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அள்ளவா? அதற்கும் ஒரு எளிய தொழில் நுட்பம் உள்ளது.
1. முதலில் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு முட்டையை போடுங்கள். அந்த முட்டை தண்ணீருக்கு அடியில் சென்று அங்கேயே தங்கி விட்டால் அது நல்ல முட்டை. அந்த முட்டையை நம்முடைய நல் விதையை பிரிக்கும் முயற்ச்சிக்கு எடுத்து கொள்ளலாம்.
2. அந்த முட்டையை தண்ணிரிலிருந்து எடுத்து விடவும்.
3. 200 கிராம் உப்பை(1 லிட்டர் தண்ணீருக்கு) தண்ணீரில் இட்டு கரைக்கவும்.
4. தற்போது முட்டையை தண்ணிரில் போடவும். முட்டை தண்ணீரில் மிதக்க வேண்டும். அதன் மேல் பகுதி (25 பைசா நாணயம் அளவு) மட்டும் வெளியில் தெரியவேண்டும். அவ்வாறு இருந்தால் கரைசல் நமக்கு தேவையான அளவு உள்ளது என்று அர்த்தம். அவ்வாறு இல்லாவிட்டால் உப்பின் அளவை அதிகரித்து அல்லது புதிய கரைசலை தயார் செய்து சரி செய்யவும்
5. அந்த கரைசலில் நெல் விதையை இடவும்
6 சில நிமிடத்தில் தண்ணீரில் மிதக்கும் விதையை வெளியில் எடுத்து விடவும். அது பதர் விதை. அது முளைக்காது.
7. 10 - 15 நிமிடம் கழித்து மேலுள்ள தண்ணிரை வடிய விடவும்.அடியில் தங்கிய விதையை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். பிறகு நல்ல தண்ணீரில் கழுவவும்.
8. பிறகு விதைக்கும் முன் நிழலில் உலர்த்தவும்
இதன் மூலம் நல்ல முளைப்பு தன்மை உள்ள விதையை மட்டும் தனியே பிரித்து எடுக்களாம்
--
Sunday, April 26, 2009
Wednesday, April 22, 2009
தென்னங்கன்றுகளின் தரத்தை கண்டறிய சுலபமான வழி!

தென்னங்கன்றுகளின் தரத்தை சுலபமாக கண்டறிய செங்கல்பட்டு மற்றும் கிருஷ்னகிரியை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கடை பிடிக்கும் வழி முறையை இப்பதிவில் பார்ப்போம்.தென்னங்கன்றுகளை ஒரு ஊசியின் மூலம் குத்தி பார்க்க வேண்டும்.அப்படி குத்தி பார்க்கும் போது ஊசி அதிகமான ஆழத்திற்கு உள் சென்றால், அந்த கன்றுகள் அவ்வளவு தரமானவை இல்லை. நீங்கலும் தென்னங்கன்று வாங்கும் போது இதை முயற்சி செய்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்களேன்!
--
Sunday, April 12, 2009
ஏன் வேண்டும் கோடை உழவு?

ராமு: அண்ணே! என்ன வானத்தையே பார்த்துகிட்டு இருக்கீங்க!
சோமு : அடிக்கிற வெயிலுக்கு பெருசா மழை வந்தா நல்லா இருக்குமேன்னு பாக்குரேன்!!
ராமு : ஆமாண்ணே ! அப்பதான் வறண்டு போயிருக்கிற குளம்,குட்டையெல்லாம் நிரம்ப ஆரம்பிக்கும் ,தண்ணீர் பிரச்சனை இல்லாம இருக்கலாம்.
சோமு : தம்பி! கோடையில மழை பெஞ்சா குளம்,குட்டைக்கு மட்டுமில்ல நம்ம வயலுக்கும் நல்லது !
ராமு: கொஞ்சம்விளக்கமா சொல்லுங்களேன்.
சோமு: தமிழகத்துல வருசத்துக்கு சராசரியா 958 மி.மீ மழை பெய்யுது. அதுல 35 சதம் தென்மேற்கு பருவ காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்கள்ளையும்,50 சதவீதம் வடமேற்கு பருவகாற்று வீசும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையுள்ள மாதங்கள்ளையும் மிச்சமுள்ள 15 சதவீதம் ஜனவரி முதல் மே வரை உள்ள மாதங்கள்ளையும் பெய்யுது. உழவு செய்யப்படாத கெட்டியான நிலத்தில் விழும் இந்த மழையானது மண் அரிப்பை ஏற்படுத்துவதோடல்லாம மண்ணில் இடப்பட்ட உரசத்துக்களையும் இழுத்துட்டு போய்டுது . மண்ணில் ஈர்த்துகொள்ளப்பட்ட குறைந்த அளவு மழை நீரும் சூரிய வெப்பத்தினால சீக்கிரமா ஆவியாக மாறி வெளியேறுது. அதோட வயலில் முளைத்து வளர்ற களைசெடிகளும் நீரை உபயோகிப்பதால மண்ணில் உள்ள நீர் மிக வேகமாக விரயமாகி போவுது.
ராமு :அண்ணே! இதுல இவ்வளவு பிரச்சனை இருக்கான்னே ?வளமான மேல் மண் அரிப்பு,மண்ணில் இடப்பட்ட உர சத்து வீணாவது போன்றவற்றை தடுத்து மழை நீரை எப்படின்னே சேமிக்கிறது?
சோமு: இந்த பிரச்சனைகள்ள இருந்து விடுபடனும்னா சாகுபடி செய்ற நிலங்கள்ள பயிர் அறுவடைக்கு பின்னாடி பெய்யிர கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை 3 வருசத்திற்கு ஒரு முறை சட்டிகலப்பை கொண்டு அழமாக(25 செ.மீ முதல் 30 செ.மீ வரை) உழனும். இதனால மண்ணின் இறுக்கமும் குறையுது.அப்படி உழுதா அடுத்ததாக நம்ப பயிர் செய்யும் போது பயிரோட வேர்கள் ஆழமா வளர்ந்துட்டு போகும். நீர் பற்றாக்குறை காலங்கள்ல கீழ்மட்டத்தில உள்ள நீரை கூட பயிர் உறிஞ்சி வறட்ச்சியை தாக்கு பிடிக்க முடியுது. அதோட இப்படி உழுவதால நன்கு வேர் விட்டு வளர கூடிய அருகம்புல் மற்றும் கோரை கிழங்கு போன்ற களைகளின் வேர் பகுதி முழுவதும் தோண்டி எடுக்க பட்டு சூரிய வெப்பத்தால் அழிக்க படுது.
ராமு :அண்ணே!மேல சொல்லுங்கண்ணே!
சோமு : அவசர படாதே. இப்படி உழுத பின்னே பெய்யுர ஒவ்வொரு மழைக்கும் டில்லர் கலப்பை இல்லாட்டி கொளுகலப்பை வச்சி நில சரிவுக்கு குறுக்க நிலத்தை நன்கு பல தடவை புழுதி பட உழனும்.இப்படி உழுவதால மழை நீர் மண்ணுக்கு அடியில் 10 செ.மீ முதல் 15 செ.மீ ஆழத்திற்கு உட்செல்லும். இதனால நீர் ஆவியவதை தடுப்பதோட வறட்சி காலங்கள்ல பயிருக்கு பயன்படுத்தலாம்னா பாரேன்.
ராமு:இதுல இவ்வளவு விஷயம் இருக்காண்ணே! மண் அரிப்பு தடுப்பு, மழை நீரு சேமிப்போட வேற எதாவது பயன் இருக்காண்ணே?
சோமு :நல்ல கேட்ட போ! பயிர அறுவடை செய்த பின்னாடி வயல்ல பயிரோட தாள்கள் தங்கிடுது. இது பூச்சிகளுக்கு உணவாகவும்,நல்ல தங்குமிடமாகவும் முட்டைகள் இட்டு பாதுகாக்கும் இடமாகவும் இருக்குது . அதனால கோடைஉழவு செய்தோம்னா களைசெடிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தாள்கள் அழிக்கப்பட்டு மக்கி பயிருக்கு உரமாகுது. இதுனால களை விதைகள் உற்பத்தி தடுக்கப்பட்டு களைகளின் தொந்தரவு குறைக்கபடுது.அதோட பயிரை பாதிக்க கூடிய பூச்சிகளின் முட்டைகளும் கூண்டு புழுக்களும் அழிக்கபடுது உழவு செய்யும் போது நெறைய பறவைங்க உழுது கொண்டிருக்கிற நிலங்கள்ள உட்கார்ந்து இருப்பதை பார்த்திருப்ப. இது ஏன்னா நிலத்தை உழும்போது மண்ணின் அடியிலுள்ள கூண்டுபுழுக்கள், பூச்சிகளின் முட்டைகள் மேலும் களைகளோட விதைகள் மண்ணின் மேல் வந்து கிடக்கும் போது அவற்றை உணவாக சாப்பிட தான். அதுங்க சாப்பிடலன்னா கூட மண்ணுக்கு மேல புழுக்களின் முட்டைகள்.கூண்டு புழுக்கள் மற்றும் களைகளின் விதைகள் வரும் போது சூரிய வெப்பத்தால அழிஞ்சிடும்.
ராமு :அண்ணே! நம்ம முன்னோர்கள் கோடை உழவின் மகத்துவத்தை உணர்ந்து தான் சித்திரை மாத புழுதி பத்திரை மாற்று தங்கம், சித்திரையில மழை பெய்தால் பொன் ஏர் கட்டலாம்னும் சொல்லியிருபாங்களோ! நாமும் கோடை உழவின் மகத்துவமறிந்து செயல் பட்டா குறைந்த நீர் இல்லாட்டி சிக்கன நீருல அதிக மகசூல் எடுக்கலாம். என்னா நான் சொல்ரது?
சோமு :பரவாயில்லயே!கற்பூரம் மாதிரி உடனே பத்திகிட்ட!அது சரி எங்க கிளம்பிட்ட?
ராமு : டிராக்டருக்கு சொல்லி வைக்கத்தான்.
--
Sunday, April 5, 2009
நாங்களும் அமைச்சர்கள் தான் - பயிருக்கு தேவையான சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்
பயிரின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன. அனைத்து சத்துக்களும் மண்ணில் வெவ்வேறு அளவு உள்ளன.நம் மண்ணில் இவ்வகை சத்துக்கள் பயிரின் தேவையை விட குறைவாக இருந்தால் அவற்றை உரங்கள் மூலம் பயிருக்கு அளிக்கின்றோம். பயிருக்கு தேவையான சத்துகளை நான்கு வகையாக பிரிக்கலாம். அவை
மிக அதிகம் தேவைபடுபவை(Macro Nutrient)- கார்பன் ,ஹைடிரஜன்,ஆக்சிசன் -இவை இயற்கையிலேயே அதிக அளவு கிடைக்கிறது. இவற்றை உரம் மூலம் அளிக்க தேவையில்லை.
அதிகம் தேவைபடுபவை(Major Nutrient)-தழை சத்து(Nitrogen), மணி சத்து(Phosporus), சாம்பல் சத்து(potassium)
சிறிதளவு அதிகம் தேவைபடுபவை(Micro Nutrient)- கால்சியம் (Calcium),மெக்னீசியம் (magnisium) ,சல்பர் (sulfur)
குறைவான அளவு தேவைபடுபவை(Secondary Nutrient): இரும்பு சத்து(Fe),மாங்கனீசு(Mn),துத்தநாகம்(Zn),குளோரின்(Cl),போரான்(B),கோபால்ட்(Co),நிக்கல்(Ni) மற்றயவை.
பயிருக்கு தேவையான சத்துக்கள் பற்றி பார்த்தோம். இனி அவை பயிர்களுக்கு செய்யும் பணி பற்றி பார்ப்போம். இது தேர்தல் காலம். மக்கள் அனைவரும் இனி வரும் காலத்தில் வரும் ஆட்சி மற்றும் அதில் இடம் பெற போகும் அமைச்சர்கள் பற்றி சிந்திக்கும் நேரமிது. பயிர்கள் வளர்ச்சியை கட்டு படுத்துவதிலும் மேற் சொன்ன சத்துக்கள் ஒரு ராஜாங்கத்தையே நடக்கிறது. அவற்றின் சேவையை அமைச்சரவையின் பணியுடன் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் , அந்த சத்துக்களின் முக்கியத்துவத்தை நினைவில் வைத்து கொள்வது எளிது. பயிருக்கு உரமிடும் போதும் சத்துக்களின் பங்கை அறிந்து உரமிடலாம்.
சத்துக்களின் அமைச்சரவையை பார்ப்போம்
தழை சத்து - அரசன் (photosynthasis - இலை தழைகளின் உணவு தயாரிப்புக்கு தழை சத்து)
மணி சத்து -ராணி (விதை மற்றும் வேர் வளர்ச்சி - மணி மணியான விதைகளுக்கும் வளமான வேருக்கும் மணி சத்து)
சாம்பல் சத்து- போகுவரத்து துறை அமைச்சர்( சத்துக்களை இடபெயர்ச்சி செய்ய - தழையில் உள்ள சத்தை பழத்திற்கு எடுத்து செல்லும் சாதூர்யம் சாம்பல் சத்துக்கு உண்டு )
கால்சியம்- பாதுகாப்பு துறை அமைச்சர்(பயிரின் செல்களை வளமாக்கி பூச்சி மற்றும் நோயிலிருந்து காப்பாற்றுதல் - மொத்தத்தில் செடியின் பலத்திற்கு கால்சியம் )
மக்னீசியம்- உள்துறை அமைச்சர்(பச்சயம் தயாரிப்பு - இலையின் பசுமை புரட்சிக்கு மெக்னீசியம் )
சல்பர்- பெட்ரோலிய துறை அமைச்சர்(எண்ணை உற்பத்தி)
துத்தநாகம்- தழை சத்தின் செக்ரட்டரி(தழை சத்தை புரோட்டீனாக மாற்றுவது)
--
மிக அதிகம் தேவைபடுபவை(Macro Nutrient)- கார்பன் ,ஹைடிரஜன்,ஆக்சிசன் -இவை இயற்கையிலேயே அதிக அளவு கிடைக்கிறது. இவற்றை உரம் மூலம் அளிக்க தேவையில்லை.
அதிகம் தேவைபடுபவை(Major Nutrient)-தழை சத்து(Nitrogen), மணி சத்து(Phosporus), சாம்பல் சத்து(potassium)
சிறிதளவு அதிகம் தேவைபடுபவை(Micro Nutrient)- கால்சியம் (Calcium),மெக்னீசியம் (magnisium) ,சல்பர் (sulfur)
குறைவான அளவு தேவைபடுபவை(Secondary Nutrient): இரும்பு சத்து(Fe),மாங்கனீசு(Mn),துத்தநாகம்(Zn),குளோரின்(Cl),போரான்(B),கோபால்ட்(Co),நிக்கல்(Ni) மற்றயவை.
பயிருக்கு தேவையான சத்துக்கள் பற்றி பார்த்தோம். இனி அவை பயிர்களுக்கு செய்யும் பணி பற்றி பார்ப்போம். இது தேர்தல் காலம். மக்கள் அனைவரும் இனி வரும் காலத்தில் வரும் ஆட்சி மற்றும் அதில் இடம் பெற போகும் அமைச்சர்கள் பற்றி சிந்திக்கும் நேரமிது. பயிர்கள் வளர்ச்சியை கட்டு படுத்துவதிலும் மேற் சொன்ன சத்துக்கள் ஒரு ராஜாங்கத்தையே நடக்கிறது. அவற்றின் சேவையை அமைச்சரவையின் பணியுடன் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் , அந்த சத்துக்களின் முக்கியத்துவத்தை நினைவில் வைத்து கொள்வது எளிது. பயிருக்கு உரமிடும் போதும் சத்துக்களின் பங்கை அறிந்து உரமிடலாம்.
சத்துக்களின் அமைச்சரவையை பார்ப்போம்
தழை சத்து - அரசன் (photosynthasis - இலை தழைகளின் உணவு தயாரிப்புக்கு தழை சத்து)
மணி சத்து -ராணி (விதை மற்றும் வேர் வளர்ச்சி - மணி மணியான விதைகளுக்கும் வளமான வேருக்கும் மணி சத்து)
சாம்பல் சத்து- போகுவரத்து துறை அமைச்சர்( சத்துக்களை இடபெயர்ச்சி செய்ய - தழையில் உள்ள சத்தை பழத்திற்கு எடுத்து செல்லும் சாதூர்யம் சாம்பல் சத்துக்கு உண்டு )
கால்சியம்- பாதுகாப்பு துறை அமைச்சர்(பயிரின் செல்களை வளமாக்கி பூச்சி மற்றும் நோயிலிருந்து காப்பாற்றுதல் - மொத்தத்தில் செடியின் பலத்திற்கு கால்சியம் )
மக்னீசியம்- உள்துறை அமைச்சர்(பச்சயம் தயாரிப்பு - இலையின் பசுமை புரட்சிக்கு மெக்னீசியம் )
சல்பர்- பெட்ரோலிய துறை அமைச்சர்(எண்ணை உற்பத்தி)
துத்தநாகம்- தழை சத்தின் செக்ரட்டரி(தழை சத்தை புரோட்டீனாக மாற்றுவது)
--
Monday, March 30, 2009
தர்பூசனி விளைச்சலுக்கு சில யோசனைகள்

தர்பூசனி நீர் தேங்கி நிற்காத மண் வகைகளில் நன்கு வளரும். NS - 295 (Namdhari), Riya (sinnova company), SPW - 10 (SPIC), PKM 1, Sugar baby, Manik, Jothi, Bedana, Durgapuri, Meetha, Durgapura keesar, Amruth போன்றவை தமிழக சூழ்நிலைக்கு ஏற்றவை.பழ தோட்டம் மற்றும் தென்னை தோட்டத்தில் ஊடுபயிராக இவற்றை வளர்க்களாம்.பெண் மலர்களின் எண்ணிக்கையை பொருத்தே இதன் விளைச்சல் அமைவதால், பெண் மலர்களின் எண்ணிக்கையை பெருக்குவது மிகவும் அவசியம்.அதற்கு 2.5 மில்லி எத்திரலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 15 நாளில் தெளிக்க வேண்டும். அதற்கு பிறகும் 1 வார இடைவெளியில் இதை தொடர்ந்து தெளிக்க வேண்டும். சத்து குறைவினால் பழங்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.அதை தவிர்க்க 4 - 5 கிலோ நன்றாக மக்கிய தொழு உரத்தை ஒவ்வொரு செடிக்கும் அளிக்க வேண்டும். இதை பின்பற்றினால் தர்பூசனியில் நல்ல விளைச்சல் பெறலாம்.
--
Saturday, March 14, 2009
விவசாயிகளுக்கு நல்ல காலமா?
எக்கனாமிக்ஸ் டைம்ஸ்ல் வந்த இந்த செய்தியை பாருங்கள்.இந்தியாவின் மொத்த உற்பத்தி பொருளுக்கான பண வீக்கம் 2.5 சதம் அதிகரித்துள்ளது.ஆனால் உணவு பொருள் மற்றும் தானியத்தின் பண வீக்கம் 8 - 12% அதிகரித்துள்ளது. இதன் மூலம் அறிய கூடியது என்ன என்றால் ஒவ்வொருவரும் தனது வருமானத்தில் உணவுக்கு செலவிடும் பணத்தின் சதவிதம் அதிகரித்து ஆடம்பர செலவுக்கு செலவிடும் பணத்தின் சதவிதம் குறையும்.இதன் மூலம் அதிக அளவு பணம் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கைக்கு வர வாய்ப்புள்ளது.ஏழை மக்களை இந்த விலை உயர்விலிருந்து காக்க அரசாங்கம், PDS போன்றவை உள்ளதால் அவர்கள் இந்த பாதிப்பினில் இருந்து தடுக்க படுவர்.விவசாயத்தை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், அதிக பணம் அவர்களை நோக்கி சென்றால்(அவர்கள் செய்யும் செலவு மூலம்) அது அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக இருக்கும்.உலக அளவில் கடந்த சில காலமாக உணவு தானியத்தின் நிகர விலை ஏற்றமும் 50% உள்ளதாக கணக்கிட்டுள்ளனர். மேலும் சீனா மற்றும் இந்தியாவின் நடுத்தர மக்களின் வளர்ச்சியால் தேவை ஒவ்வொரு வருடமும் 5% உயரும் என கணிக்கின்றனர்.
ஆனால் இதன் முழு பயனும் இடை தரகர்களிடம் போகாமல் விவசாயிகளுக்கு போய் சேருமா என்பதுதான் கேள்விக்குறி?
--
ஆனால் இதன் முழு பயனும் இடை தரகர்களிடம் போகாமல் விவசாயிகளுக்கு போய் சேருமா என்பதுதான் கேள்விக்குறி?
--
Tuesday, March 3, 2009
உரங்களை தயாரிக்கும் நுண்ணுயிரிகள்
சிறு வயதில் மண்புழு உழவனுக்கு நண்பன் என்று படித்திருப்போம், இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையும் கூட, மண்புழுவை போல சில நுண்ணுயிர்களும் உழவனுக்கு நண்பனாக திகழ்கிறது
பயிருக்கு முக்கிய தேவையான உரங்களான தழை சத்து,மணி சத்து மற்றும் சாம்பல் சத்தை பெரும்பாலும் வேதி உரங்கள் மூலம் தருவதால் உற்பத்தி செலவு அதிகமாவதுடன் சுற்று சூழ்நிலை சீர்கேடும் விளைகிறது.நம் மண்ணில் இச்சத்துக்களின் அளவு குறைவாக இருப்பதால் பயிருக்கு எப்படியாவது நாம் இச்சத்துக்களை அளித்தே ஆக வேண்டும்,சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாமல் இந்த பிரச்சனையை தீர்ப்பதெப்படி?
தீர்வின் ஒரு பகுதியாக உயிர் உரங்களை நாம் பயன் படுத்தலாம்.முதலில் உயிர் உரங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம்.
மண்ணில் வாழும் நுண்ணியிரிகளில் சில வகை நுண்ணியிரிகள் நன்மை செய்யும் நுண்ணியிரிகள்.
இவற்றில் சில வகை நுண்ணியிர்கள் பயிருக்கு தேவையான தழை சத்தை வளிமண்டலத்தில் உள்ள வாயுவை உரமாக மாற்றும் திறன் படைத்தவை.
சில நுண்ணியிரிகலோ மண்ணில் பயிருக்கு பயன் படாத வகையில் இருக்கும் சத்தை பயன் படும் வகையில் மாற்றி கொடுக்கும்.
வேறு சில நுண்ணியிரிகலோ பயிர் வளர்ச்சி ஊக்கியை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்
தழைசத்து(Nitrogen) கொடுக்கும் நுண்ணுயிர் உரம்
வளி மண்டலத்தில் 78% தழை சத்து இருந்தாலும் பயிரால் வளைமண்டலத்தில் உள்ள தழை சத்தை எடுத்து உபயோக படுத்த முடியாது. இந்திய மண்ணிலும் தழை சத்து மிக குறைவாகவே உள்ளது. இதை சரி செய்ய யூரியா போனற உரங்களை இடுகிறோம். மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை நிலை படுத்தி பயிருக்கு உரமாக தருகிறது.
இவற்றில் முக்கியமானது ரைசோபியம். இது பயிறு வகை செடிகளின் வேர்களின் உள்ளே முடிச்சி ஏற்படுத்தி அதனுள் வழும். இந்த வகை உறவால் பயிர் மற்றும் நுண்ணியிர் இரண்டும் பயனடைவர். நுண்ணியிரிக்கு உணவும் இருக்க இடமும் கிடைக்கின்றது. அதனுள் வாழும் ரைசோபியம் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கிடைக்கிறது. இதனால் அந்த பயிர் மட்டுமன்றி அந்த பயிர் இறந்த பிறகு அதன் வேரில் இருக்கும் தழை சத்தால் அடுத்து வரும் பயிர்கள் கூட பயனடைகிறது. செஸ்பேனியா போன்ற தழை உரத்திற்காக வளர்க்க படும் செடிகளின் தண்டு பகுதியில் கூட இவ்வகை உயிர்கள் உரத்தை சேமிக்கின்றன.
அசோஸ்பிரில்லம் என்ற உயிர் பெரும்பாலான பயிகளின் வேருக்கு அருகில் வளர்ந்து வளி மண்டல தழை சத்தை நிலை படுத்துவதுடன், வேர்களை நன்கு வளர செய்யும் ஊக்கிகளையும் உற்பத்தி செய்கிறது.
அசிட்டோபேக்டர் என்ற நுண்ணியிர் கரும்பில் உள்ள சர்க்கரை சத்தை உணவாக உட்கொண்டு வளி மண்டல தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கொடுக்கும்.
நீலபச்சை பாசி என்பது பாசி வகையை சேர்ந்தது. இது நெல் வளரும் இடங்களில் நீர் தேங்கி இருப்பதால், அவ்வகை இடத்தில் தழைசத்து உரத்தை உருவாக்கி பயிருக்கு கொடுக்கும்.
அசோல்லா என்பது நீரில் வளரும் ஒரு கசடு(fern) தாவரம். இது அதிக அளவில் organic matter உருவாக்குவதுடன், இதன் இலையின் மேல் வளரும் நீலபச்சை பாசி மூலம் தழை சத்து உரத்தையும் பயிருக்கு கொடுக்கும்
மணிசத்து(phosperous) கொடுக்கும் நுண்ணியிர் உரம்
மண்ணில் மணிசத்து ஒரளவிற்கு இருந்தாலும் அவை பயிர்களால் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் சிலவகை அமிலவகைகளை உற்பத்தி செய்து, மண்ணில் பயிருக்கு கிடைக்காத வகையில் உள்ள மணி சத்தை கரைத்து பயிர்கள் உபயோக படுத்தும் வகையில் மாற்றி கொடுக்கிறது.
பாஸ்போபேக்டீரியா என்ற நுண்ணியிர் உரம் அனைத்து பயிர் வளரும் சூழ்நிலையிலும் வளர்ந்து மணி சத்தை கரைத்து பயிருக்கு கொடுக்கும்.
VAM எனப்படும் பூஞ்சை வகை உயிர் பயிர்களின் வேரில் புகுந்து நீண்ட தூரம் இழை விட்டு வளர்ந்து வேர் வளரும் இடத்தை விட அதிக இடம் வளர்ந்து பயிருக்கு தேவையான மணிசத்து மற்றும் பயிருக்கு குறைந்த அளவு தேவை படும் சத்துகளையும் பயிருக்கு எடுத்து அளிக்கிறது. இவ்வகை உயிர்கள் பயிருக்கு சிறிதளவு வறட்ச்சி தாங்கும் தன்மையை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு தன்மையையும் அளிக்கிறது. இது முக்கியமாக மர வகை பயிர்களின் பயன்பாட்டிற்கு உபயோக படுகிறது.
பயிர் ஊக்கி(Plant growth promoting harmones) கொடுக்கும் நுண்ணியிர் உரம்
சூடோமோனாசு போன்ற நுண்ணியிர்கள் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.இவை பயிர்களின் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்க கூடிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த வகை நுண்ணியிர்களை அனைத்து வகை பயிர்களுக்கும் உபயோகபடுத்தலாம்.
இது தவர வேறு சில பயிருக்கு பயன் தரும் நுண்ணியிரிகள், பயிர்களின் வளர்ச்சிக்கு உரமாக பயன் படுத்த அராய்ச்சி அளவில் உள்ளது .
இவ்வகை நுன்ணியிர் உரம் உண்மையிலேயே பயன் அளிக்கிறதா? எவ்வாறு உபயோக படுத்த வேண்டும்? அது செயல் படும் விதம் எப்படி என்பது பற்றி இனி வரும் பதிவுகளில் காணலாம்.
--
பயிருக்கு முக்கிய தேவையான உரங்களான தழை சத்து,மணி சத்து மற்றும் சாம்பல் சத்தை பெரும்பாலும் வேதி உரங்கள் மூலம் தருவதால் உற்பத்தி செலவு அதிகமாவதுடன் சுற்று சூழ்நிலை சீர்கேடும் விளைகிறது.நம் மண்ணில் இச்சத்துக்களின் அளவு குறைவாக இருப்பதால் பயிருக்கு எப்படியாவது நாம் இச்சத்துக்களை அளித்தே ஆக வேண்டும்,சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாமல் இந்த பிரச்சனையை தீர்ப்பதெப்படி?
தீர்வின் ஒரு பகுதியாக உயிர் உரங்களை நாம் பயன் படுத்தலாம்.முதலில் உயிர் உரங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம்.
மண்ணில் வாழும் நுண்ணியிரிகளில் சில வகை நுண்ணியிரிகள் நன்மை செய்யும் நுண்ணியிரிகள்.
இவற்றில் சில வகை நுண்ணியிர்கள் பயிருக்கு தேவையான தழை சத்தை வளிமண்டலத்தில் உள்ள வாயுவை உரமாக மாற்றும் திறன் படைத்தவை.
சில நுண்ணியிரிகலோ மண்ணில் பயிருக்கு பயன் படாத வகையில் இருக்கும் சத்தை பயன் படும் வகையில் மாற்றி கொடுக்கும்.
வேறு சில நுண்ணியிரிகலோ பயிர் வளர்ச்சி ஊக்கியை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்
தழைசத்து(Nitrogen) கொடுக்கும் நுண்ணுயிர் உரம்
வளி மண்டலத்தில் 78% தழை சத்து இருந்தாலும் பயிரால் வளைமண்டலத்தில் உள்ள தழை சத்தை எடுத்து உபயோக படுத்த முடியாது. இந்திய மண்ணிலும் தழை சத்து மிக குறைவாகவே உள்ளது. இதை சரி செய்ய யூரியா போனற உரங்களை இடுகிறோம். மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை நிலை படுத்தி பயிருக்கு உரமாக தருகிறது.
இவற்றில் முக்கியமானது ரைசோபியம். இது பயிறு வகை செடிகளின் வேர்களின் உள்ளே முடிச்சி ஏற்படுத்தி அதனுள் வழும். இந்த வகை உறவால் பயிர் மற்றும் நுண்ணியிர் இரண்டும் பயனடைவர். நுண்ணியிரிக்கு உணவும் இருக்க இடமும் கிடைக்கின்றது. அதனுள் வாழும் ரைசோபியம் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கிடைக்கிறது. இதனால் அந்த பயிர் மட்டுமன்றி அந்த பயிர் இறந்த பிறகு அதன் வேரில் இருக்கும் தழை சத்தால் அடுத்து வரும் பயிர்கள் கூட பயனடைகிறது. செஸ்பேனியா போன்ற தழை உரத்திற்காக வளர்க்க படும் செடிகளின் தண்டு பகுதியில் கூட இவ்வகை உயிர்கள் உரத்தை சேமிக்கின்றன.
அசோஸ்பிரில்லம் என்ற உயிர் பெரும்பாலான பயிகளின் வேருக்கு அருகில் வளர்ந்து வளி மண்டல தழை சத்தை நிலை படுத்துவதுடன், வேர்களை நன்கு வளர செய்யும் ஊக்கிகளையும் உற்பத்தி செய்கிறது.
அசிட்டோபேக்டர் என்ற நுண்ணியிர் கரும்பில் உள்ள சர்க்கரை சத்தை உணவாக உட்கொண்டு வளி மண்டல தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கொடுக்கும்.
நீலபச்சை பாசி என்பது பாசி வகையை சேர்ந்தது. இது நெல் வளரும் இடங்களில் நீர் தேங்கி இருப்பதால், அவ்வகை இடத்தில் தழைசத்து உரத்தை உருவாக்கி பயிருக்கு கொடுக்கும்.
அசோல்லா என்பது நீரில் வளரும் ஒரு கசடு(fern) தாவரம். இது அதிக அளவில் organic matter உருவாக்குவதுடன், இதன் இலையின் மேல் வளரும் நீலபச்சை பாசி மூலம் தழை சத்து உரத்தையும் பயிருக்கு கொடுக்கும்
மணிசத்து(phosperous) கொடுக்கும் நுண்ணியிர் உரம்
மண்ணில் மணிசத்து ஒரளவிற்கு இருந்தாலும் அவை பயிர்களால் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் சிலவகை அமிலவகைகளை உற்பத்தி செய்து, மண்ணில் பயிருக்கு கிடைக்காத வகையில் உள்ள மணி சத்தை கரைத்து பயிர்கள் உபயோக படுத்தும் வகையில் மாற்றி கொடுக்கிறது.
பாஸ்போபேக்டீரியா என்ற நுண்ணியிர் உரம் அனைத்து பயிர் வளரும் சூழ்நிலையிலும் வளர்ந்து மணி சத்தை கரைத்து பயிருக்கு கொடுக்கும்.
VAM எனப்படும் பூஞ்சை வகை உயிர் பயிர்களின் வேரில் புகுந்து நீண்ட தூரம் இழை விட்டு வளர்ந்து வேர் வளரும் இடத்தை விட அதிக இடம் வளர்ந்து பயிருக்கு தேவையான மணிசத்து மற்றும் பயிருக்கு குறைந்த அளவு தேவை படும் சத்துகளையும் பயிருக்கு எடுத்து அளிக்கிறது. இவ்வகை உயிர்கள் பயிருக்கு சிறிதளவு வறட்ச்சி தாங்கும் தன்மையை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு தன்மையையும் அளிக்கிறது. இது முக்கியமாக மர வகை பயிர்களின் பயன்பாட்டிற்கு உபயோக படுகிறது.
பயிர் ஊக்கி(Plant growth promoting harmones) கொடுக்கும் நுண்ணியிர் உரம்
சூடோமோனாசு போன்ற நுண்ணியிர்கள் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.இவை பயிர்களின் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்க கூடிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த வகை நுண்ணியிர்களை அனைத்து வகை பயிர்களுக்கும் உபயோகபடுத்தலாம்.
இது தவர வேறு சில பயிருக்கு பயன் தரும் நுண்ணியிரிகள், பயிர்களின் வளர்ச்சிக்கு உரமாக பயன் படுத்த அராய்ச்சி அளவில் உள்ளது .
இவ்வகை நுன்ணியிர் உரம் உண்மையிலேயே பயன் அளிக்கிறதா? எவ்வாறு உபயோக படுத்த வேண்டும்? அது செயல் படும் விதம் எப்படி என்பது பற்றி இனி வரும் பதிவுகளில் காணலாம்.
--
Subscribe to:
Posts (Atom)