Sunday, April 26, 2009

நெல்லில் நல்ல விதையை தேர்ந்து எடுப்பது எப்படி?

வயலில் தேவையான பயிரின் எண்ணிக்கையை பெருவதற்கு விதையின் முளைப்பு திறனை அறிவது மிகவும் அவசியம். பொதுவாக விவசாயிகள் தங்கள் விதையை பிறரிடமிருந்து வாங்குவதால் அதன் முளைப்பு திறன் குறித்து அறிந்திருப்பது கடினம். தங்களிடம் உள்ள விதைகளில் நன்கு முளைப்பு திறன் மட்டும் உள்ள விதையை பிரித்து எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அள்ளவா? அதற்கும் ஒரு எளிய தொழில் நுட்பம் உள்ளது.

1. முதலில் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு முட்டையை போடுங்கள். அந்த முட்டை தண்ணீருக்கு அடியில் சென்று அங்கேயே தங்கி விட்டால் அது நல்ல முட்டை. அந்த முட்டையை நம்முடைய நல் விதையை பிரிக்கும் முயற்ச்சிக்கு எடுத்து கொள்ளலாம்.

2. அந்த முட்டையை தண்ணிரிலிருந்து எடுத்து விடவும்.

3. 200 கிராம் உப்பை(1 லிட்டர் தண்ணீருக்கு) தண்ணீரில் இட்டு கரைக்கவும்.

4. தற்போது முட்டையை தண்ணிரில் போடவும். முட்டை தண்ணீரில் மிதக்க வேண்டும். அதன் மேல் பகுதி (25 பைசா நாணயம் அளவு) மட்டும் வெளியில் தெரியவேண்டும். அவ்வாறு இருந்தால் கரைசல் நமக்கு தேவையான அளவு உள்ளது என்று அர்த்தம். அவ்வாறு இல்லாவிட்டால் உப்பின் அளவை அதிகரித்து அல்லது புதிய கரைசலை தயார் செய்து சரி செய்யவும்

5. அந்த கரைசலில் நெல் விதையை இடவும்

6 சில நிமிடத்தில் தண்ணீரில் மிதக்கும் விதையை வெளியில் எடுத்து விடவும். அது பதர் விதை. அது முளைக்காது.

7. 10 - 15 நிமிடம் கழித்து மேலுள்ள தண்ணிரை வடிய விடவும்.அடியில் தங்கிய விதையை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். பிறகு நல்ல தண்ணீரில் கழுவவும்.

8. பிறகு விதைக்கும் முன் நிழலில் உலர்த்தவும்

இதன் மூலம் நல்ல முளைப்பு தன்மை உள்ள விதையை மட்டும் தனியே பிரித்து எடுக்களாம்

--

Wednesday, April 22, 2009

தென்னங்கன்றுகளின் தரத்தை கண்டறிய சுலபமான வழி!


தென்னங்கன்றுகளின் தரத்தை சுலபமாக கண்டறிய செங்கல்பட்டு மற்றும் கிருஷ்னகிரியை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கடை பிடிக்கும் வழி முறையை இப்பதிவில் பார்ப்போம்.தென்னங்கன்றுகளை ஒரு ஊசியின் மூலம் குத்தி பார்க்க வேண்டும்.அப்படி குத்தி பார்க்கும் போது ஊசி அதிகமான ஆழத்திற்கு உள் சென்றால், அந்த கன்றுகள் அவ்வளவு தரமானவை இல்லை. நீங்கலும் தென்னங்கன்று வாங்கும் போது இதை முயற்சி செய்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்களேன்!

--

Sunday, April 12, 2009

ஏன் வேண்டும் கோடை உழவு?


ராமு: அண்ணே! என்ன வானத்தையே பார்த்துகிட்டு இருக்கீங்க!

சோமு : அடிக்கிற வெயிலுக்கு பெருசா மழை வந்தா நல்லா இருக்குமேன்னு பாக்குரேன்!!

ராமு : ஆமாண்ணே ! அப்பதான் வறண்டு போயிருக்கிற குளம்,குட்டையெல்லாம் நிரம்ப ஆரம்பிக்கும் ,தண்ணீர் பிரச்சனை இல்லாம இருக்கலாம்.

சோமு : தம்பி! கோடையில மழை பெஞ்சா குளம்,குட்டைக்கு மட்டுமில்ல நம்ம வயலுக்கும் நல்லது !

ராமு: கொஞ்சம்விளக்கமா சொல்லுங்களேன்.

சோமு: தமிழகத்துல வருசத்துக்கு சராசரியா 958 மி.மீ மழை பெய்யுது. அதுல 35 சதம் தென்மேற்கு பருவ காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்கள்ளையும்,50 சதவீதம் வடமேற்கு பருவகாற்று வீசும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையுள்ள மாதங்கள்ளையும் மிச்சமுள்ள 15 சதவீதம் ஜனவரி முதல் மே வரை உள்ள மாதங்கள்ளையும் பெய்யுது. உழவு செய்யப்படாத கெட்டியான நிலத்தில் விழும் இந்த மழையானது மண் அரிப்பை ஏற்படுத்துவதோடல்லாம மண்ணில் இடப்பட்ட உரசத்துக்களையும் இழுத்துட்டு போய்டுது . மண்ணில் ஈர்த்துகொள்ளப்பட்ட குறைந்த அளவு மழை நீரும் சூரிய வெப்பத்தினால சீக்கிரமா ஆவியாக மாறி வெளியேறுது. அதோட வயலில் முளைத்து வளர்ற களைசெடிகளும் நீரை உபயோகிப்பதால மண்ணில் உள்ள நீர் மிக வேகமாக விரயமாகி போவுது.

ராமு :அண்ணே! இதுல இவ்வளவு பிரச்சனை இருக்கான்னே ?வளமான மேல் மண் அரிப்பு,மண்ணில் இடப்பட்ட உர சத்து வீணாவது போன்றவற்றை தடுத்து மழை நீரை எப்படின்னே சேமிக்கிறது?

சோமு: இந்த பிரச்சனைகள்ள இருந்து விடுபடனும்னா சாகுபடி செய்ற நிலங்கள்ள பயிர் அறுவடைக்கு பின்னாடி பெய்யிர கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை 3 வருசத்திற்கு ஒரு முறை சட்டிகலப்பை கொண்டு அழமாக(25 செ.மீ முதல் 30 செ.மீ வரை) உழனும். இதனால மண்ணின் இறுக்கமும் குறையுது.அப்படி உழுதா அடுத்ததாக நம்ப பயிர் செய்யும் போது பயிரோட வேர்கள் ஆழமா வளர்ந்துட்டு போகும். நீர் பற்றாக்குறை காலங்கள்ல கீழ்மட்டத்தில உள்ள நீரை கூட பயிர் உறிஞ்சி வறட்ச்சியை தாக்கு பிடிக்க முடியுது. அதோட இப்படி உழுவதால நன்கு வேர் விட்டு வளர கூடிய அருகம்புல் மற்றும் கோரை கிழங்கு போன்ற களைகளின் வேர் பகுதி முழுவதும் தோண்டி எடுக்க பட்டு சூரிய வெப்பத்தால் அழிக்க படுது.

ராமு :அண்ணே!மேல சொல்லுங்கண்ணே!

சோமு : அவசர படாதே. இப்படி உழுத பின்னே பெய்யுர ஒவ்வொரு மழைக்கும் டில்லர் கலப்பை இல்லாட்டி கொளுகலப்பை வச்சி நில சரிவுக்கு குறுக்க நிலத்தை நன்கு பல தடவை புழுதி பட உழனும்.இப்படி உழுவதால மழை நீர் மண்ணுக்கு அடியில் 10 செ.மீ முதல் 15 செ.மீ ஆழத்திற்கு உட்செல்லும். இதனால நீர் ஆவியவதை தடுப்பதோட வறட்சி காலங்கள்ல பயிருக்கு பயன்படுத்தலாம்னா பாரேன்.

ராமு:இதுல இவ்வளவு விஷயம் இருக்காண்ணே! மண் அரிப்பு தடுப்பு, மழை நீரு சேமிப்போட வேற எதாவது பயன் இருக்காண்ணே?

சோமு :நல்ல கேட்ட போ! பயிர அறுவடை செய்த பின்னாடி வயல்ல பயிரோட தாள்கள் தங்கிடுது. இது பூச்சிகளுக்கு உணவாகவும்,நல்ல தங்குமிடமாகவும் முட்டைகள் இட்டு பாதுகாக்கும் இடமாகவும் இருக்குது . அதனால கோடைஉழவு செய்தோம்னா களைசெடிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தாள்கள் அழிக்கப்பட்டு மக்கி பயிருக்கு உரமாகுது. இதுனால களை விதைகள் உற்பத்தி தடுக்கப்பட்டு களைகளின் தொந்தரவு குறைக்கபடுது.அதோட பயிரை பாதிக்க கூடிய பூச்சிகளின் முட்டைகளும் கூண்டு புழுக்களும் அழிக்கபடுது உழவு செய்யும் போது நெறைய பறவைங்க உழுது கொண்டிருக்கிற நிலங்கள்ள உட்கார்ந்து இருப்பதை பார்த்திருப்ப. இது ஏன்னா நிலத்தை உழும்போது மண்ணின் அடியிலுள்ள கூண்டுபுழுக்கள், பூச்சிகளின் முட்டைகள் மேலும் களைகளோட விதைகள் மண்ணின் மேல் வந்து கிடக்கும் போது அவற்றை உணவாக சாப்பிட தான். அதுங்க சாப்பிடலன்னா கூட மண்ணுக்கு மேல புழுக்களின் முட்டைகள்.கூண்டு புழுக்கள் மற்றும் களைகளின் விதைகள் வரும் போது சூரிய வெப்பத்தால அழிஞ்சிடும்.

ராமு :அண்ணே! நம்ம முன்னோர்கள் கோடை உழவின் மகத்துவத்தை உணர்ந்து தான் சித்திரை மாத புழுதி பத்திரை மாற்று தங்கம், சித்திரையில மழை பெய்தால் பொன் ஏர் கட்டலாம்னும் சொல்லியிருபாங்களோ! நாமும் கோடை உழவின் மகத்துவமறிந்து செயல் பட்டா குறைந்த நீர் இல்லாட்டி சிக்கன நீருல அதிக மகசூல் எடுக்கலாம். என்னா நான் சொல்ரது?

சோமு :பரவாயில்லயே!கற்பூரம் மாதிரி உடனே பத்திகிட்ட!அது சரி எங்க கிளம்பிட்ட?

ராமு : டிராக்டருக்கு சொல்லி வைக்கத்தான்.

--

Sunday, April 5, 2009

நாங்களும் அமைச்சர்கள் தான் - பயிருக்கு தேவையான சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்

பயிரின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன. அனைத்து சத்துக்களும் மண்ணில் வெவ்வேறு அளவு உள்ளன.நம் மண்ணில் இவ்வகை சத்துக்கள் பயிரின் தேவையை விட குறைவாக இருந்தால் அவற்றை உரங்கள் மூலம் பயிருக்கு அளிக்கின்றோம். பயிருக்கு தேவையான சத்துகளை நான்கு வகையாக பிரிக்கலாம். அவை

மிக அதிகம் தேவைபடுபவை(Macro Nutrient)- கார்பன் ,ஹைடிரஜன்,ஆக்சிசன் -இவை இயற்கையிலேயே அதிக அளவு கிடைக்கிறது. இவற்றை உரம் மூலம் அளிக்க தேவையில்லை.

அதிகம் தேவைபடுபவை(Major Nutrient)-தழை சத்து(Nitrogen), மணி சத்து(Phosporus), சாம்பல் சத்து(potassium)

சிறிதளவு அதிகம் தேவைபடுபவை(Micro Nutrient)- கால்சியம் (Calcium),மெக்னீசியம் (magnisium) ,சல்பர் (sulfur)

குறைவான அளவு தேவைபடுபவை(Secondary Nutrient): இரும்பு சத்து(Fe),மாங்கனீசு(Mn),துத்தநாகம்(Zn),குளோரின்(Cl),போரான்(B),கோபால்ட்(Co),நிக்கல்(Ni) மற்றயவை.

பயிருக்கு தேவையான சத்துக்கள் பற்றி பார்த்தோம். இனி அவை பயிர்களுக்கு செய்யும் பணி பற்றி பார்ப்போம். இது தேர்தல் காலம். மக்கள் அனைவரும் இனி வரும் காலத்தில் வரும் ஆட்சி மற்றும் அதில் இடம் பெற போகும் அமைச்சர்கள் பற்றி சிந்திக்கும் நேரமிது. பயிர்கள் வளர்ச்சியை கட்டு படுத்துவதிலும் மேற் சொன்ன சத்துக்கள் ஒரு ராஜாங்கத்தையே நடக்கிறது. அவற்றின் சேவையை அமைச்சரவையின் பணியுடன் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் , அந்த சத்துக்களின் முக்கியத்துவத்தை நினைவில் வைத்து கொள்வது எளிது. பயிருக்கு உரமிடும் போதும் சத்துக்களின் பங்கை அறிந்து உரமிடலாம்.

சத்துக்களின் அமைச்சரவையை பார்ப்போம்

தழை சத்து - அரசன் (photosynthasis - இலை தழைகளின் உணவு தயாரிப்புக்கு தழை சத்து)

மணி சத்து -ராணி (விதை மற்றும் வேர் வளர்ச்சி - மணி மணியான விதைகளுக்கும் வளமான வேருக்கும் மணி சத்து)

சாம்பல் சத்து- போகுவரத்து துறை அமைச்சர்( சத்துக்களை இடபெயர்ச்சி செய்ய - தழையில் உள்ள சத்தை பழத்திற்கு எடுத்து செல்லும் சாதூர்யம் சாம்பல் சத்துக்கு உண்டு )

கால்சியம்- பாதுகாப்பு துறை அமைச்சர்(பயிரின் செல்களை வளமாக்கி பூச்சி மற்றும் நோயிலிருந்து காப்பாற்றுதல் - மொத்தத்தில் செடியின் பலத்திற்கு கால்சியம் )

மக்னீசியம்- உள்துறை அமைச்சர்(பச்சயம் தயாரிப்பு - இலையின் பசுமை புரட்சிக்கு மெக்னீசியம் )

சல்பர்- பெட்ரோலிய துறை அமைச்சர்(எண்ணை உற்பத்தி)

துத்தநாகம்- தழை சத்தின் செக்ரட்டரி(தழை சத்தை புரோட்டீனாக மாற்றுவது)

--