Saturday, March 14, 2009

விவசாயிகளுக்கு நல்ல காலமா?

எக்கனாமிக்ஸ் டைம்ஸ்ல் வந்த இந்த செய்தியை பாருங்கள்.இந்தியாவின் மொத்த உற்பத்தி பொருளுக்கான பண வீக்கம் 2.5 சதம் அதிகரித்துள்ளது.ஆனால் உணவு பொருள் மற்றும் தானியத்தின் பண வீக்கம் 8 - 12% அதிகரித்துள்ளது. இதன் மூலம் அறிய கூடியது என்ன என்றால் ஒவ்வொருவரும் தனது வருமானத்தில் உணவுக்கு செலவிடும் பணத்தின் சதவிதம் அதிகரித்து ஆடம்பர செலவுக்கு செலவிடும் பணத்தின் சதவிதம் குறையும்.இதன் மூலம் அதிக அளவு பணம் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கைக்கு வர வாய்ப்புள்ளது.ஏழை மக்களை இந்த விலை உயர்விலிருந்து காக்க அரசாங்கம், PDS போன்றவை உள்ளதால் அவர்கள் இந்த பாதிப்பினில் இருந்து தடுக்க படுவர்.விவசாயத்தை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், அதிக பணம் அவர்களை நோக்கி சென்றால்(அவர்கள் செய்யும் செலவு மூலம்) அது அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக இருக்கும்.உலக அளவில் கடந்த சில காலமாக உணவு தானியத்தின் நிகர விலை ஏற்றமும் 50% உள்ளதாக கணக்கிட்டுள்ளனர். மேலும் சீனா மற்றும் இந்தியாவின் நடுத்தர மக்களின் வளர்ச்சியால் தேவை ஒவ்வொரு வருடமும் 5% உயரும் என கணிக்கின்றனர்.

ஆனால் இதன் முழு பயனும் இடை தரகர்களிடம் போகாமல் விவசாயிகளுக்கு போய் சேருமா என்பதுதான் கேள்விக்குறி?

--

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்