Monday, March 30, 2009

தர்பூசனி விளைச்சலுக்கு சில யோசனைகள்



தர்பூசனி நீர் தேங்கி நிற்காத மண் வகைகளில் நன்கு வளரும். NS - 295 (Namdhari), Riya (sinnova company), SPW - 10 (SPIC), PKM 1, Sugar baby, Manik, Jothi, Bedana, Durgapuri, Meetha, Durgapura keesar, Amruth போன்றவை தமிழக சூழ்நிலைக்கு ஏற்றவை.பழ தோட்டம் மற்றும் தென்னை தோட்டத்தில் ஊடுபயிராக இவற்றை வளர்க்களாம்.பெண் மலர்களின் எண்ணிக்கையை பொருத்தே இதன் விளைச்சல் அமைவதால், பெண் மலர்களின் எண்ணிக்கையை பெருக்குவது மிகவும் அவசியம்.அதற்கு 2.5 மில்லி எத்திரலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 15 நாளில் தெளிக்க வேண்டும். அதற்கு பிறகும் 1 வார இடைவெளியில் இதை தொடர்ந்து தெளிக்க வேண்டும். சத்து குறைவினால் பழங்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.அதை தவிர்க்க 4 - 5 கிலோ நன்றாக மக்கிய தொழு உரத்தை ஒவ்வொரு செடிக்கும் அளிக்க வேண்டும். இதை பின்பற்றினால் தர்பூசனியில் நல்ல விளைச்சல் பெறலாம்.

--

2 comments:

  1. .இந்த தர்பூசணியை ஈழத்தில் வத்தகப் பழம் என்போம். இன்றும் பெரிய வியாபார இலக்கு அற்ற ஒரு பழமாக அங்கு இருப்பது மிகக் கவலை.நெருப்பு வெய்யில் காலத்தில் கூட இப்பழத்தை வாங்கி உண்போர் குறைவு. இனிவரும் காலத்தில் இதைச் சிந்திக்கலாம். ஆனால் நாடு அல்லோகல்லம் தீரவேண்டுமே.
    ஒரு படம் போட்டு விடுங்கள்.

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி திரு.யோகன் பாரிஸ்.நிச்சயம் கூடிய விரைவில் ஈழத்தில் நல்ல காலம் பிறக்கும். அது இழந்த பெருமைகளையும், மக்களின் இனிய வாழ்க்கையும் மலரும்.நீங்கள் கூறிய படி செடியின் படத்தை இணைத்து விட்டேன். நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்