Wednesday, May 13, 2009

குறைந்த உழவில் நிறைந்த விளைச்சல்


பயிரின் உற்பத்தி பெருக்கத்திற்கு உழவின் பங்கு இன்றியமையாதது.பயிரின் வேரை மண்ணில் நிலைத்து நிற்க வைப்பது, மண்ணின் தன்மையை நன்கு உயர்த்தி, மண் துகள்களுக்கு இடையே உள்ள இடை வெளியை அதிகரித்து நீர் பிடிப்பு தன்மையை அதிகரிப்பது போன்ற செயல்கள் நன்கு நடைபெற உழவு உதவுகிறது.மேலும் தொழு உரம் மற்றும் உரத்தை மண்ணில் நன்கு கலக்கவும்,களை செடிகளை அழிக்கவும்(முக்கியமாக நீண்ட வேரை கொண்ட களை செடிகளை) உழவு உதவுகிறது.

வேர் வளர்ச்சியின் தன்மை பயிருக்கு பயிர் வேறுபடுகிறது. சில பயிரின் வேர் ஆழமாகவும், சில பயிரின் வேர் மேம்போக்காக வளரும் தன்மை உடையது.பயிரின் தன்மைக்கேற்ப உழவின் முறையை மாற்றி அமைப்பதன் மூலம் பயிரின் விளைச்சளை 30 - 40 சதம் வரை அதிகரிக்களாம். மேம்போக்காக வளரும் நெல் பயிர் போன்ற பயிருக்கு ஆழமான உழவு தேவை படுவது இல்லை.ஆனால் உளுந்து பயிரு போன்ற ஆழ ஊடுருவி வளரும் பயிர்கள் ஆழமான உழவை எதிர்பார்க்கிறது.
இது போல் மேம்போக்காக வேர் விட்டு வளரும் நெற் பயிருக்கு உழவின் தேவையை குறைப்பதன் மூலம் உழவிற்கு ஆகும் செலவில் 40 சதம் குறைக்கலாம்.

சமீப காலமாக விவசாயிகளிடையே மிகவும் வேகமாக பரவி வரும் நியதி குறைந்த உழவு (Conservative Tillage)அல்லது பாதுகாப்பு உழவு. குறைந்த உழவின் அடிப்படை உழவை குறைப்பதன் மூலம் மண்ணின் கலவையை அதிக அளவு மாற்றாமல், அறுவடைக்கு பிறகு மிஞ்சிய முந்தய பயிரின் எச்சத்தை அப்படியே விட்டு(30 சதம் வரை) அதில் புது பயிரை வளர்க்க முனைவது எனலாம்.சில நேரங்களில் இந்த குறைந்த உழவு என்பதற்கு பதில் உழவே இல்லாமலேயே பயிரை வளர்க்க கூட முடியும்!

குறைந்த உழவு செய்யும் முறை:

முந்தய பயிரை அறுவடை செய்த பின் ஒன்று அல்லது இரண்டு முறை டிராக்டர் வைத்து உழ வேண்டும்.அதற்கு பின் ஐந்து நாள் இடைவெளியில் உடனடியாக இரு முறை வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். இது களை செடிகளை முளைக்க தூண்டும். களை செடிகள் முளைத்தவுடன்(2 - 3 இலை விட்டபின்) கிளைபோசேட்டை 1 லிட்டர் தண்ணீரில் 15 மில்லிலிட்டர் என கரைத்து நாப்சாக் ஸ்பிரேயரில் பிளட் ஜெட்(flood jet) நாசில் கொண்டு களை செடிகளுக்கு மேல் நன்றாக விரவி தெளிக்க வேண்டும்.கிளைபோசாட் தெளித்த 48 மணி நேரத்திற்கு பிறகு வயலில் 5 நாட்களுக்கு நீர் தேக்கி வைக்க வேண்டும். இது மண்னை மென்மை படுத்தும். வயலை சம படுத்திய பின் நெல் நாற்றை வயலில் நடலாம். களையை முளைக்கும் முன் கட்டு படுத்தும் களை கொல்லியை நடவு நட்ட 3 நாட்களுக்கு பின் தெளிக்க வேண்டும்.களை கொல்லியை தெளிக்கும் போது மண் முழுவதும் மூடி இருக்கும் படி மெல்லிய இழை அளவிற்கு தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். பொதுவாக விவசாயிகள் 4 முதல் 5 முறை நடவு நடும் முன் வயலை நன்றாக உழுவார்கள்.ஒரு உழுதலுக்கு 750 முதல் 900 ரூபய் வரை ஆகும். குறைந்த அளவிலான உழவு மூலம் இதை குறைக்கலாம்.

இந்த முறையால் ஏற்படும் நன்மைகள்:

1.செடியின் வேருக்கு நன்கு பிடிப்பு கிடைக்கிறது.

2.நடவு நட்ட வயலில் உயிர் பிழைக்கும் நாற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

3.நிலத்தில் போடும் உரம் பயிருக்கு அதிக அளவு கிடைக்கிறது. ஆழ உழுதால் உரம் மண்ணில் மிக அதிக அளவு ஆழ செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே உரம் வீணாக வாய்ப்பு உள்ளது. ஆனால் இம்முறை உழவால் பயிரின் வேர் பகுதியிலேயே உரம் தங்கி விடும்.

4.உழவிற்கு செலவிடும் பணம் கணிசமாக(1750 - 2750/ஏக்கர்) சேமிக்க படுகிறது.

5.மண்னின் அங்கக சத்து(Organic carbon) அதிக அளவு காக்க படுகிறது.

6.விளைச்சல் 350- 425 கிலோ/ஏக்கர் அதிகரிக்கிறது.

7.பூட்டாகுளோர் மற்றும் கிளைபோசாட்டு போன்ற களை கொல்லிகள் மண்ணில் தங்குவது இல்லை என்று ஆராய்ச்சி மூலம் நிருபிக்க பட்டுள்ளது.

இம்முறையை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்.

மோட்டார் வைத்து தண்ணிர் பாய்க்கும் விவசாயிகளுக்கு இது ஏற்ற முறை.ஏனென்றால் அவர்கள் தேவையான போது தண்ணீரை நிலத்தில் பாய்ச்சலாம். தமிழ் நாட்டில் ஆற்று நீர் பாய்ச்சி விவசாயம் செய்யும் விவசாயிகள் பலர் உள்ளனர். PWD தண்ணீரை பயிரிடும் காலத்தில் ஒரே நேரத்தில் திறந்து விடுவதால் விவசாயிகள் அதை பொருத்தே உடனடியாக நிலத்தை உழ வேண்டி உள்ளது.

இது போல் உழும் நிலங்களில் பெண்கள் நாற்று நடும் போது சிறிது கடினமாக இருக்க வாய்ப்புண்டு.
--

3 comments:

  1. மான்சான்டோ கம்பெனி தன் கிளைபோசேட் விற்பனையை பெருக்கவே இம்முறையை பிரபலபடுத்துவதாக விமர்சனம் உள்ளது. எது எப்படி இருந்தாலும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயன் படுத்தி பார்த்து பயன் இருந்தால் நிச்சயம் தொடரலாம்

    ReplyDelete
  2. Very nice and good intiative. Typing in Tamil itself a huge task. After a long time I come across a Tamil blog not related to cinema, politics and jokes. My best wishes

    ReplyDelete
  3. தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி R John Christy .

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்