Monday, June 22, 2009

பயிரின் உணவு - 3 மண் பரிசோதனையின் முக்கியத்துவம்

சென்ற பகுதியில் மண் பரிசோதனை செய்ய மண் மாதிரி எடுப்பது எப்படி என்று பார்த்தோம்..

இப்பதிவில் மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை பற்றியும் மண் பரிசோதனையில் நாம் ஆராயும் காரணிகள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம். பயிர் உற்பத்தியின் செலவில் 40% செலவு பயிருக்கு தேவையான சத்துக்களை வழங்க செலவாகிறது. எனவே தேவையான சத்துக்களை மட்டும் தேவையான அளவு, தேவையான நேரத்தில் வழங்குவது மிகவும் அவசியமானது ஆகும்.

எந்த ஒரு சத்தும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் பயிர் பற்றாக்குறை அல்லது மிதமிஞ்சிய நச்சுதன்மைக்கான வெளியீட்டு குறியை காட்டும்.அது மட்டுமின்றி பயிர் வெளியிடும் குறியானது கண்டு பிடிக்க மிகவும் கடுமையானதாக இருக்கும்.இந்த பயிரின் குறியானது பூச்சி அல்லது நோய் தாக்குதலால் ஏற்படும் குறி போலவே இருக்கும்.பெரும்பாலான சத்துக்களின் குறைவு ஒரே குறியாக பயிரின் பச்சை தன்மை வெளிரியிருப்பதாகவே காட்டும். எனவே நாம் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை பற்றி அறிந்து இருப்பது அவசியமாகிறது.இல்லாவிட்டால் நம்முடைய மண்ணின் சத்தை பற்றிய கணிப்பு தவறாக போய் தேவையற்ற உரங்களை தேவையற்ற அளவு அளித்து பணம் வீணாவதுடன், பயிரின் உற்பத்தியும் குறைய வாய்ப்புள்ளது

எனவே மண்ணில் உள்ள சத்துக்களை ஒட்டு மொத்தமாக பரிசோதனை செய்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.

சில நேரங்களில் மண்ணின் வளம் நன்றாக இருந்தும் நல்ல விளைச்சளை தர கூடியதாக இல்லை. இதற்கு காரணம் மண்ணின் சுற்று சூழலில் உள்ள அனுகூலமற்ற நிலையாக இருக்கும்.
மண் பரிசோதனை மூலம் சத்துக்களின் அளவை அறிவதோடு மண்ணின் வளத்தை நிர்வகிக்கும் காரணிகளை பற்றியும் அறிந்து கொள்ளளாம்.

மண் பரிசோதனை மூலம் நாம் அறிந்து கொள்ள கூடிய காரணிகள் வருமாறு

மண் சத்துக்கள்

தழை சத்து,மணி சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மெக்னீசியம், சல்பர், துத்தநாகம், மாங்கனீசு,இரும்பு,காப்பர்,போரான் மற்றும் மாலிப்டீனம்.

பிற காரணிகள்

pH, Electrical conductivity, Organic Matter, Cation Exchange Capacity, % Base Saturation



CEC(Cation Exchange Capacity)
CEC மூலம் மண்ணின் கெட்டிதன்மையை பற்றிய செய்தியை அறிந்து கொள்ளளாம்.CEC குறைவாக இருந்தால் மண் மணற்பாங்காக இருக்கிறது என்று அர்த்தம்.CEC நடுத்தரமாக இருந்தால் மண் மிதத்தன்மையாக இருக்கிறது என்றும் CEC அதிகம் என்றால் மண்ணில் களி தன்மை அதிகம் என்றும் அர்த்தம்.

PH
PH மூலம் மண்ணில் உள்ள அமில தன்மை மற்றும் உவர் தன்மையை கண்டு பிடிக்கலாம்.PH இன் அளவு 6.5க்கும் குறைவாக இருந்தால் அது அமில நிலமாகவும் 7.5 க்கும் மேல் இருந்தால் அது உவர் நிலமாகவும் இருக்கும். PHஇன் அளவு 6.5 - 7.5 ஆக இருந்தால் மண் நல்ல நிலையில் இருக்கிறது என்லாம். இந்த PHல் தான் மண்ணில் உள்ள சத்துக்கள் எல்லாம் பயிருக்கு கிடைக்கும் நிலையில் இருக்கும்.

முந்தய பதிவுகள்

பயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1

பயிரின் உணவு-2 மண் மாதிரி எடுப்பது எப்படி?



--

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்