Friday, December 11, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 6

மாநில அரசு விவசாயிகளின் பிரச்சனைகளை எந்த அளவு புரிந்துகொண்டு உள்ளது என்பது கேள்விக்குறியே!. மத்திய அரசின் அளவுக்கு மாநில அரசுக்கு விவசாயிகளின் பிரச்சனையின் தீவிரம் புரிவதில்லை. பிரச்சனை ஏதாவது ஏற்படுமாயின் மத்திய அரசின் பொறுப்பு என்று தள்ளி விடும் சாமர்த்தியம் மட்டும் மாநில அரசுக்கு நிரம்பவே உண்டு

மாநில அரசின் மெத்தனப்போக்கு குறித்து ஒரு சாம்பிள்:

ஏரி, குளம் போன்றவற்றை தூர் வாருதல் என்பது. குறைந்தது 5 வருடங்களுக்கு ஒரு முறையாவது தூர் வார வேண்டும். எனக்குத் தெரிந்து கடைசியாக 97ம் ஆண்டு தூர் வாரப்பட்டது என்று நினைக்கிறேன். நமக்கு கிடைக்கும் மழை அளவு தாராளமானது. அதனை நாம் சேமிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார், இஸ்ரேலைப் பார் என்று கூறும் நாம் அவர்கள் எடுக்கும் முயற்சியையும் முன் மாதிரியாகக் கொள்ள வேண்டுமல்லவா? ஒவ்வொரு வருடமும் பல டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. கிடைக்கும்/இருக்கும் தண்ணீரை சேமிக்கத்தெரியாத நாம் அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் தாவாவில் இறங்குகிறோம். பொதுப்பணித்துறையின் கீழ் வரும் ஏரிகள் மற்றும் குளங்கள் போன்றவற்றை தூர் வாரி நீரை சேமித்தாலே போதும். ஒரு ரூபாய் அரிசி மற்றும் கலர் டி.வி போன்றவை தேவையில்லை. அதனை சம்பாதிக்கும் அளவு விவசாயிகள் உயர்ந்து விடுவர்.

அரசாங்கத்தின் கொள்கை என்பதில் மற்றுமொரு குறைபாடு என்பது குறைந்தபட்ச ஆதார விலை. நெல், கோதுமை மற்றும் கரும்புக்கு மட்டுமே இவை நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்வாறு இருப்பதால் தான் சிறு தானியங்கள், பயறு வகைகள் போன்றவை பயிரிடுவது பரப்பளவில் மிகவும் குறைந்துள்ளது. ஒரு வேளை இவற்றிற்கும் ஆதார விலை நிர்ணயித்தால் இவற்றின் உற்பத்தியும் கூடும். மாற்றுப்பயிர்களை பயிரிட வேண்டும் என வலியுறுத்தும் அரசு அவ்ற்றிற்கான support ம் சேர்ந்து அளிக்க வேண்டும். சர்க்கரை என்று எழுதிப் படித்தால் மட்டும் இனிக்காது.

வேளாண் கடன் தள்ளுபடி என்ற கேலிக்கூத்தை அடுத்த பதிவில் காண்போம்

--

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்