Saturday, December 12, 2009

நவீன வேளாண் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்
செம்மை நெல் சாகுபடி - பகுதி I

நமது நாட்டில் அரிசி சார்ந்த உணவுப் பழக்கமே தற்போது பிரதானமாக உள்ளது. குறைந்து வரும் நிலப்பரப்பினாலும், அதிகரித்துவரும் மக்கள் தொகையினாலும், மாறியுள்ள life style லாலும் அரிசி உட்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அரிசி (உணவு தானிய) உற்பத்தியை நாம் கூட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் செம்மை நெல் சாகுபடி. இது இதற்கு முன் தீவிர நெல் சாகுபடி, திருந்திய நெல் சாகுபடி என்ற பல பெயர்களைப் பெற்றிருந்தாலும் தற்போதைய தமிழக முதல்வர் அவர்களால் அழகாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செம்மை நெல் சாகுபடி (System of Rice Intensification - SRI) என்று அழைக்கப்படுகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் செம்மை நெல் சாகுபடி அரசால் ஊக்குவிக்கப்படுகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றமே. ஆனால், SRIன் கோட்பாடுகளை பெரும்பாலானோர் சரி வர அறியவில்லை. கயிறு பிடித்து நேராக நட்டால் அது ஸ்ரீ என்று நினைக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் அவ்வாறே கூறி தங்கள் இலக்கை முடிக்க நினைக்கிறார்கள்.

அதன் உண்மையான கோட்பாடுகள் என்ன என்பதைப் பார்ப்போம்:

1. ஒரு குத்துக்கு ஒரு நாற்று மட்டுமே நட வேண்டும்
2. சதுர நடவு நட வேண்டும் - வரிசைக்கு வரிசை இடைவெளியும், ஒரே வரிசையில் உள்ள செடிகளின் இடைவெளியும் ஒன்றாக இருக்க வேண்டும்.
3. கோனோ வீடர் பயன்படுத்தி இடை உழவு செய்ய வேண்டும் - இதன் மூலம் களைகள் மடக்கி உழப்பட்டு மண் வளம் கூடும். மேலும் இடை உழவினால் வேர்ப்பகுதியில் காற்றோட்டம் அதிகரிக்கப்படும்.
4. காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் நீர் பாய்ச்ச வேண்டும்
5. இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்

மேற்கூறிய 5 கோட்பாடுகளும் பின்பற்றப்பட்டால் தான் அதிக மகசூலை அடைய முடியும்.

இந்த சாகுபடி முறையை எப்படி மேற்கொள்வது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்:

--

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்