Saturday, December 12, 2009

செம்மை நெல் சாகுபடி - பகுதி II


செம்மை நெல் சாகுபடி - பகுதி I



நாற்றங்கால் தயாரிக்கும் முறை:


1 ஏக்கர் நடவு செய்யத்தேவையான விதை அளவு சுமார் 3 கிலோ ஆகும். 100 ச.அடி நாற்றங்கால் பரப்பு போதுமானது. முதலில் 100 ச.அடிக்கு மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். மேட்டுப்பாத்தி அமைக்கும்போது மண்ணுடன் சுமார் 5 தட்டு அளவு தொழு எரு மற்றும் 1/4 கிலோ டி.ஏ.பி உரம் சேர்த்துக்கொண்டு மண்ணுடன் நன்கு மண்வெட்டி கொண்டு கலக்க வேண்டும். பின்னர் இவ்வாறு தயாரிக்கப்பட்ட படுக்கையின் மேல் நேர்த்தி செய்யப்பட்ட நெல் விதைகளை அந்த மேட்டுப் பாத்தியில் சீராக விழுமாறு தூவ வேண்டும். பின்னர் பூவாளி கொண்டு நீர்பாய்ச்ச வேண்டும். இவ்வாறு சுமர் 1 வாரம் முதல் 10 நாட்கள் வரை பாய்ச்சியபின் மேட்டுப்பாத்தியைச் சுற்றி தண்ணீர் கட்டலாம். சுமார் 15 நாள் வயதுடைய நாற்றுகள் நடவு வயலில் நடுவதற்கு ஏற்றது.


நடவு வயல் தயாரித்தல்:


சாதாரணமாக நடவு வயல் தயாரிக்கும் முறையிலேயே இதற்கும் நடவு வயல் தயார் செய்தால் போதுமானது. மண் பரிசோதனைக்கு ஏற்ப தேவையான அடியுரம் இட்டு வயலை சமன் செய்ய வேண்டும்.


நாற்று நடவு:


15 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நாம் ஒரு கூடையிலேயே அள்ளி நடவு வயலுக்கு கொண்டு வர இயலும். மேட்டுப்பத்தியில் வளர்ந்துள்ள நாற்றுகளை அடியோடு பெயர்த்து cake slice போல கொண்டு வரலாம். பின்னர் தயார் செய்த நாற்றுகளை ஒரு குத்துக்கு 1 நாற்று வீதம் நட வேண்டும். வரிசைகளுக்கு இடையிலான இடைவெளியும், நாற்றுகளுக்கான இடைவெளியும் ஒன்றே. 22.5 செ.மீ (9") இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும் (சதுர நடவு). For all practical purposes ஒரு குத்துக்கு 2 நாற்றுகள் நடுவது நல்லது. ஏனெனில், ஒரு நாற்று அழுகினாலோ, இறந்தாலோ மற்றோறு நாற்று பயிர் எண்ணிக்கையை பராமரிக்க உதவும். மேலும் கை வசம் சிறிது நாற்று stock வைத்திருப்பது அவசியம். இவை பின்னர் Gap filling க்கு உதவும்.

நீர்ப் பாசனம்:

ஒரு முறை 2" அளவிற்கு நீர் கட்டினால் பின்னர் அது நிலத்தில் குறைந்து மயிரிழை அளவு மண்ணில் வெடிப்பு தென்படும்போது அடுத்த முறை நீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு காய்ச்சலும் பாய்ச்சலும் நீர்ப்பாசன முறை என்று பெயர்.

களை மேலாண்மை:

பயிர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாக இருப்பதால் களை வளர வாய்ப்புள்ளது. இதற்கு கோனோ வீடர் என்னும் களைக்கருவியை நட்ட 15 நாட்களில் இருந்து வாரம் ஒரு முறை வீதம் 4 வாரங்களுக்கு வயலில் ஓட்ட வேண்டும். இதனால் களைகள் மடிவதோடு, வேர்ப்பகுதிகளில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு பயிர் நன்கு கிளைக்கவும் அதிக தூர்கள் வெடிக்கவும் உதவுகிறது

தழைச்சத்து மேலாண்மை:


மேலுரமாக அளிக்கப்படும் தழைச்சத்து controlled application ஆக இருக்க இலை வண்ண அட்டையை பயன்படுத்தலாம். இது visual observation comparison மூலம் செயல்ப்டுகிறது. இலை வண்ண அட்டையை பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் பயிரின் வளர்ந்துவரும் 3வது இலையுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப தழைச்சத்து அளிக்கலாம். இலை வண்ண அட்டையின் பின் பகுதியிலேயே இதற்கான வழிமுறைகளும் பரிந்துரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

செம்மை நெல் சாகுபடி முறையின் சாதக மற்றும் பாதக அம்சங்கள்:


சாதக அம்சங்கள்:


1. சீரான இடைவெளி இருப்பதால் பயிருக்குத் தேவையான சத்துக்கள், காற்று, நீர் மற்றும் சூரிய ஒளி போட்டியின்றிக் கிடைக்கிறது. மேலும் ஒன்று அல்லது இரண்டு நாற்றுகள் மட்டுமே நடுவதாலும் மேற்கூறிய பலன்கள் கிடைக்கின்றன.

2. தூர்கள் அதிகம் கட்டுகின்றன. மணியின் எடை மற்றும் தரம் உயர்கிறது.

3. தண்ணீர்த் தேவை 40% குறைகிறது

4. விதை அளவு 90% வரை சேமிக்கப்படுகிறது. எனவே இடுபொருட்களுக்கான செலவு குறைகிறது

5. மிக முக்கியமாக அதிக மகசூல் (கிட்டத்தட்ட 50% வரை) கிடைக்கிறது.

6. பூச்சி நோய் தாக்குதலும் குறைகிறது.

பாதக அம்சங்கள்:

1. ஒரு நாற்று நடுவது கூலியாட்களுக்கு பழக்கமில்லாததால் ஆள் செலவு அதிகரிக்கிறது. (சில இடங்களில் நடவுக்கு ஆட்கள் வர மறுக்கிறார்கள்)

2. வெள்ளம் பாதிக்கக்கூடிய இடங்களில் ( Flood prone areas) இம்முறையை பின்பற்றுவது கடினம். ஏனெனில், நாற்றுகள் அழுகுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் தண்ணீரை சீராகப் பராமரிக்க இயலாது.

3. விவசாயிகளின் பொதுவான மெத்தனம் மற்றும் resistance to change.

--

1 comment:

  1. www.agri.co.nr பார்க்கவும்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்